Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Sunday, April 4, 2010

காதலாகிக் கசிந்துருகி

அலுவலகப் பேருந்தில், வைரமுத்து பற்றி ஒருவர் சிலாகித்துக் கொண்டிருக்க, முன் தினம் நண்பனின் தொலை பேசி அழைப்பு நினைவுக்கு வந்தது - "என்னடா இன்னும் கவிதை எல்லாம் எழுதுறியா?". கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும் என்று நினைத்துக் கொண்டேன். சரி சும்மா முயற்சி செய்யலாம் என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சுமாரான பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஒரு மெல்லிய காற்று வீச, கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.

"கலைந்த சிகையின்
அழகுக்குக் காரணம் -
காற்றா காதலா?"

என்று விறு விறுவென நண்பனுக்கு SMS அனுப்பினேன். "அட! இது work out ஆகும் போலிருக்கே!!" என்று உற்சாகம் அடைந்தேன்.

--

பேருந்தில் யார் யார் பயணிக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, ஒரு ஏட்டில் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இடுவோம். அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், மறு நாளும் அவள் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையொப்பம் இட்டுப் பின்னால் என் கையில் கொடுக்க, பெயரைப் பார்த்தேன் - "தென்றல்"!

"உன் பெயரை எழுதியதும்
பதிவேட்டின் பக்கங்கள்
படபடத்தன"

--

இப்படியாக ஒரு வாரம் SMS-ல் கவிதைகள் பறந்து கொண்டிருக்க, அன்று project lead எல்லோரையும் ஒரு அறைக்கு அழைத்தார். நம்ம teamல புதுசா கொஞ்சம் பேர் சேரப்போறாங்க. அவங்கள அறிமுகம் செய்யத்தான் இந்த meeting என்றார். எங்களைக் காக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்று மூவரை அழைத்து வந்தார்; எனக்கு இரத்தம் தலைக்கேறுவது தெரிந்தது..மூவரில் ஒருவர் - தென்றல். "What are the chances!!" என்று ஆச்சிரியம் அடைந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள, என்னைப்பார்த்து ஒரு மில்லி மீட்டர் அதிகம் சிரித்தாள். இருக்கைக்குச் சென்றதும், விசைப்பலகையில் என் படபடப்பை டைப்படித்தேன்.

--

ஓரிரு நாட்களில் பணி நிமித்தமாக பேசிக்கொண்டோம் - அவள் அதிகமாகவும், நான் சிக்கனமாகவும். "நீங்க ரொம்ப 'reserved'-ஆ இருக்கீங்க" என்றாள். நான் சிரித்தேன் - மீண்டும் சிக்கனமாக.

"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -
' நீங்க ரொம்ப reserved'"

--

ஒரு நாள் காலை அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"அவள் அழைக்கும் போது செல்கின்றன
vibration modeக்கு
என் செல்கள் அனைத்தும்"

' நான் வர ஒரு 5 மினிட்ஸ் ஆகும், டிரைவர கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களா?' ' நிறையவே வெய்ட் பண்ணச் சொல்றேங்க' என்று வழிந்தேன். பேருந்து வரும் முன்னரே வந்து சேர்ந்தாள்.

"உங்க caller tone நல்லாருக்கு - என்ன படம்?" என்றாள்.

"Michael Learns to Rock ஆல்பத்துல ஒரு பாட்டு".

"ஓ! ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ".

"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்".

"அட! உங்கள reservedனு தப்பா எடை போட்டுட்டேன்", என்று சிரித்தாள்.

--

ஒரு நாள் team-ல் அனைவரும் இரவு உணவிற்கு வெளியே சென்றோம். வெகு நேரம் ஆகியும் அவளைக்காணோம்.

"சைக்கிளுக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் காதலுக்கும் -
காத்திருப்பு"

என்று நண்பனுக்கு SMS அனுப்பினேன்.

கொஞ்சம் தாமதமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்திருந்த அரவிந்தை அடுத்த இருக்கைக்கு மாறச்சொல்லிவிட்டு என்னருகில் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் என்னை அர்த்தமாய்ப் பார்க்க, " நீங்க மட்டும் தான் நம்ம teamல veg..birds of same feather flock together" என்று சிரித்தாள். "அவங்க plateல இருக்கறது கூட birds of same feather தான்" என்று சமாளித்தாலும் எனக்கு உணவு இறங்கவில்லை. அன்றிரவு உறங்கவில்லை.

--
தேனீர் இடைவேளையில் ஒரு நாள், " நீங்க 'தண்ணீர் தேசம்' படிச்சிட்டிருந்தீங்களே,முடிச்சிட்டீங்களா? எனக்குத்தறீங்களா please?" என்றாள். அவளுக்கு வைரமுத்து பிடிக்கும் என்றும், புத்தகங்கள் படிப்பாள் என்றும் அன்று தெரிந்து கொண்டேன்.

--

ஒரு வேளை எல்லாம் காரணமாகத்தான் நடக்கிறதா? இவள் தான் என்னவளா? இவளுக்கு நான் ஏற்ற துணையா? என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா? திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா?" என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். கவிதைக்காய்க் காதலிக்கப் போய் இப்படி மூளையைப் பிராண்ட வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனேன். முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல், அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.

"அறுத்து விட்டதும்
அதிகம் துடித்தது - காதல் -
பல்லியின் வால் போல"

என்று சென்றது நண்பனுக்கு SMS.

--
climax 2(for international audience):
சென்ற வாரம் அவளிடமிருந்து email வந்திருந்தது - அவள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் இருப்பதாகவும், தான் விரும்பியது போலிருப்பதாகவும். அதோடு, என்னுடனான நட்பு வினோதமானது என்றும் - நாங்கள் தொடர்பற்று போனதில் வறுத்தம் அடைவதாகவும்.

பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது.

--
climax 1(for bollywood audience):
பின்னர் கதையில் சில twistகள் வந்து, தென்றலே என் வாழ்க்கைத் துணையானாள். நேற்று திடீரென கேட்டாள் "ஏன் நீ இப்போலாம் கவிதை எழுதுறதில்ல"; "கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதல் தோல்வியாவது வேணும்"; " நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே காதல் தோல்விதானே" என்று சிரித்தாள் - என் மனைவியாகிய தேவதை.

--
(Attempted a fiction, per request from Arvindh. Because of Delhi-6 effect added two climax)

Sunday, June 14, 2009

Sweet Nothings!!


கல்லூரி விடுதியில் தங்கிப்படித்த காலங்கள் பசுமை நினைவுகள். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்கு மேல் வகுப்பு கிடையாது. இரண்டு மாதங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் தேர்வு கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் செய்முறைப்பயிற்சி வகுப்புகள் (PRACTICAL) இருக்கும். அதற்கு முன் தினம் மட்டும் கொஞ்சம் மூளையை வருத்த வேண்டியிருக்கும் (பயிற்சி வகுப்பிற்கு முன்னர் மூளையைப் பயன்படுத்தும் அளவிற்குக்கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை சொன்ன பின்னரே உள்ளே அனுமதி கிடைக்கும்). சனி, ஞாயிறுகளில் வகுப்பு எப்போதும் கிடையாது. அப்பா கொடுத்த ஐனூறையோ ஆயிரத்தையோ செலவு செய்த பிறகு, மீதம் இருந்தது நொடி நொடியாய் நேரம் மட்டும் தான்.

தினமும் பத்து மணிக்கு உறங்கிவிடும் என் போன்ற நல்ல பிள்ளைகள் கூட, வார இறுதி 'மொக்கை'களில் கலந்து கொண்டு கேள்விச்செல்வத்தில் வள்ளுவர் மெச்சும் பிள்ளைகளாய் விடிய விடிய திளைத்திருப்போம். சிம்ரனில் ஆரம்பிக்கும் பேச்சு மெல்ல சித்ராவின் குரலில் கொஞ்சம் லயித்து விட்டு, வைரமுத்துவை கொஞ்சம் வம்பிழுத்து, சிலப்பதிகாரத்தை மேய்ந்து விட்ட பின்னர் ஒரு நண்பன் ஆரம்பிப்பான் - " நான் தூங்கப்போறேன்டா...". பின்னர் கதவருகில் நின்றவாரே, கண்ணகி சிலையைப் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்வான். அப்படியே சிலிக்கன் சிப்புகள் பற்றி யாராவது புத்திசாலி நண்பன் அரை மணி நேரம் பேச மற்றவர்கள் கொட்டாவி மூலம் நேர்மையான கருத்தைத் தெரிவிப்போம். ஒவ்வொருவராகக் கூட்டதில் இருந்து கலைய, சில கோட்டான்கள் விடிய விடிய 'டாபிக்' மாறிக்கொண்டிருக்கும். சில அறைகளில் கேரம் போர்டோ, சீட்டுக்கட்டோ சூடு கிளப்பிக்கொண்டிருக்கும். இன்னும் சில அறைகளில் நெப்போலியனோ, மார்க்கோப்போலோவோ நூற்றாண்டுகளுக்கப்பாலும் குடிமக்களை உத்வேகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். 'சிவகாமியின் சபதமோ', 'சிக்ஷ்த் சென்ஸ்' திரைக்கதையோ, கரட்டான்பட்டி பேய்க்கதையோ, காதலி பிரிந்த சோகக்கதையோ, வாத்தியார் பெண்ணுக்கு லெட்டெர் கொடுத்த வீரக்கதையோ எல்லாரிடமும் சொல்லுவதற்கு ஏதாவது இருக்கும். கதை ஏதும் இல்லாதவற்குக் குறைந்தபட்சம் 'ம்...' கொட்டுவதற்குத் திராணி இருக்கும். சில கதைகள் நேயர் விருப்பத்தால் ரிபீட் அடிக்கும்.

அடித்துப்பிடித்து வேலை வாங்கிய காலத்தில், எங்கள் தலைமுறைக்கு அறிமுகம் ஆனது அலைபேசி - மணிக்கணக்கில் அரட்டை அடிக்க ஏதுவாய் இருந்தது - இன்னும் இருக்கிறது. (அடுத்தடுத்த வருடங்களில் அலை பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாக வளர்ந்தது ஒரு தனிப் பொருளாதார வரலாறு).
கல்லூரி காலத்தில் இருந்த வெட்டிக்கதைகள் போல இன்றும் நிறைய இருக்கின்றன. அவற்றின் கூடவே சேர்ந்து கொண்டவை அலுவலகப் போராட்டங்களும், ஏமாற்றங்களும், சாதனைக் கொண்டாட்டங்களும்..... திருமணம் பற்றிய தயக்கங்களும், கலக்கங்களும், அழைப்புகளும்......பின்னர் - பரிசுக்கு நன்றிகளும்.

திருமணம் ஆகிவிட்ட நண்பர்களிடம் தொடர்பு மெல்ல தேயத்தொடங்குவது உண்மைதான் (தோழிகள் பெரும்பாலும்; தோழர்கள் சிறிய அளவில்). அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலை, சமுதாயக் காரணங்கள் இருக்கின்றன. வாழ்வின் இந்தக்கட்டத்தில், இதனால் தானோ என்னவோ எனக்கு 'ROCK ON' திரைப்படத்தின் 'Ye Tumhari Meri Baathein' பாடல் மிகவும் பிடித்து விட்டது என நினைக்கிறேன்.

உலகின் ஏதோ ஒரு IP அட்ரெஸ்ஸில் இருந்து கொண்டு, இதைப்படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே.....எனது ஆவலும், அப்பாடல் வரிகளின் அர்த்தமும் இதோ:


" நம் நீண்ட பேச்சுகள் தொடரும் இது போன்றே
நம் சந்திப்புகள் தொடரும் இது போன்றே
நம் இரவுகளும் பகல்களும் கழியும் இது போன்றே

பேச்சு முடியும் இடத்தில் தொடரும் புது விஷயங்கள்
அந்த விஷயங்கள் கொண்டே புனைவோம் புதுக் கவிதைகள்
நம் கவிதைகள் இதயங்களை வருடிச் செல்லும்
வார்த்தைகள் இசையில் உருகிக் கரையும்
அர்த்தங்கள் பாடலில் மூழ்கி நிறையும்

அந்தப் பாடல்கள் நம்மை மலர்ச்சியால் அலங்கரிக்கும்
நீ மலர்ந்த பாடல்களை எனக்கும் இசை, நண்பா!"


(கொஞ்சம் உரிமை மீறிக், கருப்பொருள் மாறாமல் சில வார்த்தைகளை மாற்றி உள்ளேன். இந்தியில் பாடலை எழுதியவர், பல அருமையான பாடல்களை எழுதியுள்ள Javed Akthar)

புகைப்படம்: http://www.gettyimages.com

Sunday, April 12, 2009

Love and my first blabbering post

"What according you is love?", was the question a friend recently brought up during a weekend gathering of 6 of us from my friend's circle. 5 years back I would have immediately thrown in my 2 pennies. The few grey hairs that decorate my side burns now, made me keep quiet. I knew the answer was not easy. I said, "I dont know". Sometimes the biggest wisdom is recognizing "I still dont know". This night, my mind is clogged with questions. So, here I am sitting under an imaginary Bhodhi tree and a 60 watts aura around me, with the knowledge that I surely wont attain enlightenment.

A couple marry. The wife loves the husband very much. They are the 'made for each other' couple. They have the 'new couple' craze for may be the next 1 year....then the craze gets tainted with the daily house hold disputes. They have not stopped loving yet.....just that they are entering a differen stage of love.

After 2 years, a child is born. The wife is a mother now. Most of her time is spent on the child. Has the love for her husband stopped? No, she still loves him. But she has someone more special to take care of now. The love spectrum has undergone a major shift.

The kid spends time around his mother most time for the next 4 years. I dont have to say that the mother's love is the purest and probably never ending form of love. The kid may not understand it at this point, but eventually he will, when he is in Appleton - away from home, writing blogs. The kid starts going to school, makes friends, meets teachers. Some kids, because of the kindness and fondness shown, love their teachers. I have seen kids who chose 'Betty Miss' Vs. Mom.

The kid becomes a teen. He reaches a stage of independence. He meets new friends. Develops new habits. He starts spending more time outside than in the house. The teachers thrust assignments. The parents thrust discipline. Naturally, he loves his friends' circle more than anything else. He has no respect for his mother/father/teacher. He may or may not love his parents depending on the pocket money and importantly how they accept his friends.

[wait now, have you already raised your eye brows and started jotting down points to retaliate? Read my disclaimer at the end. Hail the discoverer of disclaimers!!!]

The teen goes to college. He makes some special friends here. At college, especially in hostels where everyone is deserted from their family, where there isnt much to do beyond class hours, where there is so much fun, hobbies, love failures, shortage of pocket money and bad mess food, a bond develops which is stronger than the bond with siblings. Some of these frienships would continue life long.

Then eventually, there is a special one. Now, he would walk the sea, bend the sky, pluck the stars and die if needed. This could be love or infatuation. As if it were grammar, this passage should end with "What is the difference between love and infatuation?"

Infatuation eventually dies. After 2 years, assuming that there was no proposal/acceptance scene, the girl becomes an academic interest. "Oh she is doing MBA..?...I see", "Oh she married that guy Vinoth...?!?...I should have probably given a try". But - love - wherever she is, he cares for her. He may not walk the sea, bend the sky, pluck the stars, but he would sit with her one whole night listening to her problems...he would sacrifice a cricket match when she is in town(it is a big deal, girls!!)...his phonenumber/password/car registration something has her name/nick name. He never frowns that she did not marry him. He just wishes her good luck.

Well ofcourse, he could marry her and not do any of the above.

A couple of passages back we introduced some people called "life long friends". They are still there. But each of them is running his own love thread. So, the love among the friends is assumed to be global constant 'k' and can be used wherever the equation needs them.

Let us say he marries the special one. We have made a circle and come to 'New couple craze'. Wait....I ignored the mother for a long time....well, not me, HE. Right after his teenage, the love for his mother has undergone a spectral change. Mother's love is taken for granted just like friend's love is contant 'k'. Occassional calls and weekend meets will keep 'k' a constant unless some money-lending involves.

All this while, the mother never stopped her love for the child. As a kid she loved her mom, then her friends, then the special one, then the husband, then the kid, then.....well, there is no 'then'. The love for the kid never stops....she cannot love anyone more than her kid. (May be until super-hero 'grandchild' gives entry). A mother's love is not a human-only property. It is common to all vertebrates.....(hopefully, invertebrates dont read my blog).

Ofcourse there are other forms of love - siblings, cousins, pets, after-college friends and others that I cant clearly think of at 4 am.

Well, the point is, love is like God, it doesnt have a form. One can survive as an athiest....but not as a non-believer of love. Love is like energy, it transforms from form to form. Love is like light, it shows different colors when reflected by different objects. It doesnt have a definition.

Love involves happiness, celebration, satisfaction, inspiration, motivation, pain, disappointment, possessiveness, envy, disputes and re-union. It also involves songs and dance in Bollywood movies.

It exists in the real world!! For a man to survive, he needs, food, clothing shelter and love at every stage of his life. The best thing about love is, the more you give, the more you get.

The universe is huge, the stars small, the earth smaller, and human life very insignificant. Life is short and there is no time to be hating anyone. Fill life with love. Enlightenment.

(Disclaimer : I know some guys who love their parents than anyone else, I know guys who still talk to their friends everyday, I know Bollywood movies that dont involve song and dance. I dont claim this blog post to have said everything about love. Amen!)

Monday, January 19, 2009

அடியேன்


"அடிக்கடி கவிதை எழுதுவியோ"

"ஓ!
உன் ஒவ்வொரு அடிக்கும் கூட
சில அடிகள் எழுதுவேன்"

(சில வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை இது)
படம்: http://www.gettyimages.com/

Sunday, December 28, 2008

Prince, curse and the poem

Thought of posting a poem and since I havent written one recently, here is an old one written by me somewhere in 2004 or 2005. This requires some back ground.

One morning when we were still transitioning between college and corporate world, in came a forward which goes as below (I have shortened it):

Handsome prince - cursed by a witch - can speak only one word a year - can save the word every year, so that, for example, after 4 years of silence, can speak 5 words in the fifth year - meets a lovely princess - waits for 2 years to say 'my darling' - in the second year, decides to wait few more - 9th year, walks to her and says '"My darling, I love you! Will you marry me?" - and guess what the damsel said - "Pardon?".

That's a cruel comedy for the romantic minds. Anyway, here is what I wrote on it:

பல திங்கள் மெளனித்து
வார்த்தை வார்த்தையாய் சேமித்த காதலை
ஒரே வார்த்தையில் சிதறடித்தாள் -

"Pardon?"

(I havent used the exact words here...I am not sure what I wrote originally).

Ok...here is a transliteration(**) which I made up just now:

"Months of silence

And pounds of love

Gathered in his heart -

When the words were uttered

She spelled a bitter curse -

"Pardon?"

** Post Script added on (1/4/2009): The usage of 'transliteration' is wrong here. A better word would be 'Translation'.