Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Monday, July 18, 2011

வணக்கம் வெண்பா

வெண்பா எழுதிப்பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல். இந்த வாரம் வரிந்து கட்டிக்கொண்டு விதிகளை மனப்பாடம் செய்து எழுதியும் விட்டேன். கற்பனைக்கு வினைக்கெட (மெனக்கட) வேண்டாம் என்று, சில மேற்கத்தியப் பாடல் வரிகளை மொழிபெயர்த்துள்ளேன். இவற்றின் ஆங்கில மூலத்தைப் பாடியவர்கள்:
MJ - Michael Jackson; CD - Celine Dion; 'N - 'NSync; BA - Bryan Adams;
BD - Bob Dylon; MLTR -MLTR; BZ - Boy Zone

இக்கலைஞர்கள் என்னை மன்னிப்பார்களாக! இனி உங்கள் பாடு...

1.
I'm starting with the man in the mirror
I am asking him to change his ways
-MJ

முன்நிற்கும் பிம்பத்தின் மெய்யோன் திருந்திடப்
பின்நிற்கும் நன்நெறியில் பார்

(பார் - உலகம்)

2.
I know that I can't describe
What I'm feeling inside
..
I guess I live with the fear
This could all disappear
If I try to put it in words
-CD

நன்மொழி வேண்டிமுன் கெஞ்சினம் சொல்லின்பின்
கைத்தவறு மென்றஞ் சினம்

3.
I could build you a bridge that spans the oceanwide
But the greatest gift I give you would be to stand by your side
-CD

அருங்கடல் நீண்டளக்கும் பாலந் தரலின்
பெரும்பரி சென்துணையு னக்கு

(பெரும்பரிசு, என் துணை)

4.
Here I am - This is me
There is nowhere else on earth I'd rather be
-BA

இவ்விடம் வந்தேன் இவணாவேன் உன்நிழல்
நீங்கி இனிப்போவா னேன்

5.
When you speak the angels all sing
This is the kind of magic you bring
-MJ

அன்பேஉன் மாயநாவைச் சற்றசை - கேட்டு
மகிழலாம் தேவதை இசை

6.
When I 'm all alone with the stars above
You are the one I love
-MLTR

விண்மீன் துணைத்தும் தனித்தேன் உனையே
நினைந்தேநான் காதலித் தேன்

7.
Love me for a reason
Let the reason be love
-BZ

காரணங் கொண்டெனைக் காதல் புரிகஅக்
காரணமுங் காதலே கொள்க

8.
That he not busy being born
Is busy dying
-BD

பிறத்தல் அவசரத்தில் இன்னும் சிலரும்
இறத்தல் வழியில் பிறரும்

9.
Steal a little and they throw you in jail
Steal a lot and they make you king
-BD

சிறுபொருள் கள்வன் சிறையில் அரும்பொருள்
கள்வன் அரியணை யில்

10.
When I look into your eyes
I know that it's true
God must have spent...
A little more time
On you...
-'N

நன்முகத்தாள் மெய்யுரைக் கண்காட்டும் வானுரை
நான்முகத்தான் மெய்வருத் தல்

(தளை எங்கேனும் தட்டியிருப்பின் என் தலை தட்டுக!!)

Saturday, December 18, 2010

அவசரம்



(picture courtesty - please read the link at end)

சிறுநீர் கழிக்கும் முன்
கண்ணில் பட்டது -
கழிவு நீர்ப்பாதையில் சிக்கிய பூச்சி

ஒன்றுக்குப் போகும் அவசரம் எனக்கு
உயிரே போகும் அவசரம் பூச்சிக்கு

http://headinjurytheater.blogspot.com/2006/06/urinal-fun-in-amsterdam.html

Sunday, December 5, 2010

அழகு

உலகப் பானைக்கு
அவள்
ஒற்றைச் சோறு

Saturday, October 9, 2010

கடவுச்சொல் ஏழு

1.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
பொருளிலாச் சொற்றொடரென்ப
இம்மூன்றும் கடவுச்சொல் விதி
--
2.
மறக்காதே
எவர்க்கும் கொடுக்காதே
எங்கேனும் குறிக்காதே
குறித்தாலும் தொலைக்காதே;
ஒருவரின் ரகசியம்
கடவுச் சொல்
வேறெவரும் அறிவது
நன்மை இல்
--
3.
தன்மொழியோ
பொன்மொழியோ
அனைத்துக்கும் முன்மொழியோ
மிக விரும்பும் செம்மொழியோ -
எத்தகு அகராதியிலும் -
இதுவென்றும் அதுவென்றும்
எவர்க்கும் விளங்காச் சொல்
கடவுச் சொல்
--
4.
கவிதைக்கும் கனவுக்கும்
காதலிக்கும் கடவுளுக்கும்
நாய்க்கும் நட்புக்கும்
அறிவுக்கும் அண்மைக்கும்
சோகத்துக்கும் சோம்பலுக்கும்
உரித்தாகும் கடவுச் சொல்
உருவாகும் நிமிடத்தில்
--
5.
சிறிதென்று கொள்க
சில திங்களென்று கொள்க;
சினேகிதர்கள் ஊடல் போலும்
கடவுச்சொல் வாழ்நாள்
--
6.
கணினிக்கோ
பிற கருவிக்கோ

சேமிப்புத் தொகைக்கோ
பிற சேவைக்கணக்குக்கோ

எவற்றின் கடவுச்சொல் மீதும்
காமுறுவர் கயவர்
--
7.
சிதம்பர ரகசியமே
சிற்றம்பலம்
பேணாக் கடவுச்சொல்லோ
பேரம்பலம்

Sunday, September 26, 2010

ஒரு மழைப்பொழுதில் (On a rainy day)



கால் சட்டையை அரைக்காலாக்கிக்
கையைக் குடையாக்கிக்
கொஞ்சம் உலர்வாகவும்
நிறைய ஈரமாகவும்
அறைக்கு வந்து சேர்ந்தேன்;

சலனமின்றி,
என் வருகைக்காகக் காத்திருந்தது
ஜன்னலருகே வைத்துச் சென்ற
சோப்பு

Folding pants over the knees
Holding hands over the head
Less dry and more wet
Opened the doors to my room

There lied the detergent soap
Near the window, with bubbles of hope
Unperturbed,calm and cool
Waiting for me to save it from doom

Picture Courtesy: http://www.flickr.com/photos/26309540@N08/2637798827

Sunday, April 4, 2010

காதலாகிக் கசிந்துருகி

அலுவலகப் பேருந்தில், வைரமுத்து பற்றி ஒருவர் சிலாகித்துக் கொண்டிருக்க, முன் தினம் நண்பனின் தொலை பேசி அழைப்பு நினைவுக்கு வந்தது - "என்னடா இன்னும் கவிதை எல்லாம் எழுதுறியா?". கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும் என்று நினைத்துக் கொண்டேன். சரி சும்மா முயற்சி செய்யலாம் என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சுமாரான பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஒரு மெல்லிய காற்று வீச, கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.

"கலைந்த சிகையின்
அழகுக்குக் காரணம் -
காற்றா காதலா?"

என்று விறு விறுவென நண்பனுக்கு SMS அனுப்பினேன். "அட! இது work out ஆகும் போலிருக்கே!!" என்று உற்சாகம் அடைந்தேன்.

--

பேருந்தில் யார் யார் பயணிக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, ஒரு ஏட்டில் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இடுவோம். அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், மறு நாளும் அவள் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையொப்பம் இட்டுப் பின்னால் என் கையில் கொடுக்க, பெயரைப் பார்த்தேன் - "தென்றல்"!

"உன் பெயரை எழுதியதும்
பதிவேட்டின் பக்கங்கள்
படபடத்தன"

--

இப்படியாக ஒரு வாரம் SMS-ல் கவிதைகள் பறந்து கொண்டிருக்க, அன்று project lead எல்லோரையும் ஒரு அறைக்கு அழைத்தார். நம்ம teamல புதுசா கொஞ்சம் பேர் சேரப்போறாங்க. அவங்கள அறிமுகம் செய்யத்தான் இந்த meeting என்றார். எங்களைக் காக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்று மூவரை அழைத்து வந்தார்; எனக்கு இரத்தம் தலைக்கேறுவது தெரிந்தது..மூவரில் ஒருவர் - தென்றல். "What are the chances!!" என்று ஆச்சிரியம் அடைந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள, என்னைப்பார்த்து ஒரு மில்லி மீட்டர் அதிகம் சிரித்தாள். இருக்கைக்குச் சென்றதும், விசைப்பலகையில் என் படபடப்பை டைப்படித்தேன்.

--

ஓரிரு நாட்களில் பணி நிமித்தமாக பேசிக்கொண்டோம் - அவள் அதிகமாகவும், நான் சிக்கனமாகவும். "நீங்க ரொம்ப 'reserved'-ஆ இருக்கீங்க" என்றாள். நான் சிரித்தேன் - மீண்டும் சிக்கனமாக.

"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -
' நீங்க ரொம்ப reserved'"

--

ஒரு நாள் காலை அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"அவள் அழைக்கும் போது செல்கின்றன
vibration modeக்கு
என் செல்கள் அனைத்தும்"

' நான் வர ஒரு 5 மினிட்ஸ் ஆகும், டிரைவர கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களா?' ' நிறையவே வெய்ட் பண்ணச் சொல்றேங்க' என்று வழிந்தேன். பேருந்து வரும் முன்னரே வந்து சேர்ந்தாள்.

"உங்க caller tone நல்லாருக்கு - என்ன படம்?" என்றாள்.

"Michael Learns to Rock ஆல்பத்துல ஒரு பாட்டு".

"ஓ! ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ".

"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்".

"அட! உங்கள reservedனு தப்பா எடை போட்டுட்டேன்", என்று சிரித்தாள்.

--

ஒரு நாள் team-ல் அனைவரும் இரவு உணவிற்கு வெளியே சென்றோம். வெகு நேரம் ஆகியும் அவளைக்காணோம்.

"சைக்கிளுக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் காதலுக்கும் -
காத்திருப்பு"

என்று நண்பனுக்கு SMS அனுப்பினேன்.

கொஞ்சம் தாமதமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்திருந்த அரவிந்தை அடுத்த இருக்கைக்கு மாறச்சொல்லிவிட்டு என்னருகில் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் என்னை அர்த்தமாய்ப் பார்க்க, " நீங்க மட்டும் தான் நம்ம teamல veg..birds of same feather flock together" என்று சிரித்தாள். "அவங்க plateல இருக்கறது கூட birds of same feather தான்" என்று சமாளித்தாலும் எனக்கு உணவு இறங்கவில்லை. அன்றிரவு உறங்கவில்லை.

--
தேனீர் இடைவேளையில் ஒரு நாள், " நீங்க 'தண்ணீர் தேசம்' படிச்சிட்டிருந்தீங்களே,முடிச்சிட்டீங்களா? எனக்குத்தறீங்களா please?" என்றாள். அவளுக்கு வைரமுத்து பிடிக்கும் என்றும், புத்தகங்கள் படிப்பாள் என்றும் அன்று தெரிந்து கொண்டேன்.

--

ஒரு வேளை எல்லாம் காரணமாகத்தான் நடக்கிறதா? இவள் தான் என்னவளா? இவளுக்கு நான் ஏற்ற துணையா? என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா? திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா?" என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். கவிதைக்காய்க் காதலிக்கப் போய் இப்படி மூளையைப் பிராண்ட வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனேன். முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல், அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.

"அறுத்து விட்டதும்
அதிகம் துடித்தது - காதல் -
பல்லியின் வால் போல"

என்று சென்றது நண்பனுக்கு SMS.

--
climax 2(for international audience):
சென்ற வாரம் அவளிடமிருந்து email வந்திருந்தது - அவள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் இருப்பதாகவும், தான் விரும்பியது போலிருப்பதாகவும். அதோடு, என்னுடனான நட்பு வினோதமானது என்றும் - நாங்கள் தொடர்பற்று போனதில் வறுத்தம் அடைவதாகவும்.

பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது.

--
climax 1(for bollywood audience):
பின்னர் கதையில் சில twistகள் வந்து, தென்றலே என் வாழ்க்கைத் துணையானாள். நேற்று திடீரென கேட்டாள் "ஏன் நீ இப்போலாம் கவிதை எழுதுறதில்ல"; "கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதல் தோல்வியாவது வேணும்"; " நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே காதல் தோல்விதானே" என்று சிரித்தாள் - என் மனைவியாகிய தேவதை.

--
(Attempted a fiction, per request from Arvindh. Because of Delhi-6 effect added two climax)

Sunday, August 16, 2009

வ(வா)சிக்காமல் விட்ட பக்கங்கள்


அந்தக் காலாண்டிற்கும்
'சிறந்த பணியாளர்' விருது வாங்கி வந்த இரவில்,
அறையில் இரைந்து கிடந்தன
காது மடிக்கப்பட்ட பல புத்தகங்கள்.


Tuesday, June 2, 2009

நட்பறிதல்

கல்லூரி சினிமா இசை இலக்கியம்
இடை இடையே மெளனம்..
எல்லாம் பேசிக்கொண்டே உன் வீடு வந்து சேர்ந்தோம்;

பிறகே தெரிந்துகொண்டோம்
உன்னிடம் குடை இருந்ததை நானும்
என்னிடம் குடை இருந்ததை நீயும்

சிரிப்படங்கிப்,
பின்னும் பேசிக் கொண்டிருந்தோம் -
நீ - நான் - மழை

Tuesday, March 31, 2009

எல்லாம் வல்லவன்


தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அணுவைத்துளைத்தால் அதனுள்ளும் இருப்பான் -
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
ஆதிப்பரம்பொருள்
e மேல் மிதக்கும் மைனஸ்

(இதுவும் பழசுதான்....2007ல எழுதினது..)

Saturday, March 21, 2009

திரை கடலும் திரவியமும்




அலை நனைத்த பாதம்
கடல் நனைந்த பெளர்ணமி
ஒட்டி வந்த மணல்
கொட்டி வந்த கனம்
மடல் கடித்த ஈரம்
ஊர்ந்து சென்ற நேரம்
-
எல்லாம் விட சுகம் நம்மிடை நிரம்பிய மெளனம்!

நானும் இந்த தேசத்துக் கடலும் சுகம்;
நண்பனே...நலமறிய ஆவல்
-

நன்றல்லது கர்வம்


உன் 'சுளுக்' வார்த்தையும்
என் 'முணுக்' கோபமும்
முறித்தது உண்மைதான்

வேறெவனிடமோ நீ உதவி கேட்ட அன்றே
விரிசல் விட்டிருந்தது நட்பு.
-

Sunday, January 25, 2009

நெய்தல் திணை


நெசவுக்கலைக்கு இரையாகிறது பட்டுப்பூச்சி
சிலந்தி வலையிலும்.......
என்று ஆரம்பித்தது என் சிலந்திக்காதல். இப்படியாகப் பள்ளிப்பருவத்தில் விட்டத்தைப்பார்த்துக்கொட்டாவி விட்டப்பொழுதுகளில் சில சிலந்தி வலைகளில் கொஞ்சமாகச் சிக்கிச் சீக்கிரமே தப்பித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரியில் கால் பதித்த மாத்திரத்தில், கவிதையும் பதிக்க எண்ணிக் கூரையைப் பார்த்தபடி கூர் தீட்டிய போது கண்ணில் பட்டன ஒரு எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டும் எட்டாமல்....அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தவறாமல் சிக்கிக்கொள்கிறேன் கண்ணில்படும் சிலந்தி வலையில் எல்லாம். சொல்லப்போனால் பாட நூல்களை விட நான் மிகவும் ஒட்டிக்கொண்டது சிலந்தி நூல்களில் தான்.

சுவற்றைப்பார்த்து உறக்க நிலைக்குச் சென்ற மதியங்களில்,

எச்சில் மொழிந்த சிலந்தி,
கட்டி முடித்தது ஒரு கூடு.....
அடடா எச்சத்தில் ஒரு வினை முற்று!!

என்று இலக்கண மயக்கம் வந்ததுண்டு.

எல்லாப் பூச்சிகளும் அமித்தாப் பச்சனைப் போல 6 அடிகளுடன் தோன்றினாலும், இவை மட்டும் ஒருதிருக்குறள் இலவச இணைப்பு வாங்கியது போல் 2 அடிகள் கையூட்டாகப் பெறுகின்றன. சில வகைசிலந்திகளுக்கு எட்டு கண்கள் கூட உண்டாம்......extra கரங்களும் கண்களும் இருப்பதால்சிலந்திகள்தான் பூச்சி வகையராக்களின் கடவுளாக இருக்கும் என்று கூட எண்ணியதுண்டு.

ஒரு முறை குறுக்கெழுத்துப் போட்டிக்குப் புதிர்கள் தயார் செய்யும் பொழுது வழக்கம் போல் ஒருவலையில் சிக்கியதில் 'பழைமைக்கு அடையாளம் இந்த நூலகம் (5)' என்று புதிர் வைத்தேன் - 'நூலாம்படை' என்ற சொல்லுக்கு. 'கன்னிமரா' (இதுவும் ஐந்தெழுத்து) என்று எழுதியவர்கள் எல்லாம்பின்னர் அறைக்கு வந்து ரெளத்திரம் பழகிச்சென்றார்கள்.

மூன்றாம் ஆண்டில் எனக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்ட போது, எனக்கு முன்னரே குடிபுகுந்திருந்தது ஒரு சிலந்தி. 'அறைக்குள் மாளிகையா?' என்று ஒரு கவிதையைத் தெளித்தேன். ஏளனமாய்ப் பார்த்து விட்டு, தன் எச்ச வினையைத் தொடர்ந்தது.

பின்னொரு நாள், என் தந்தையின் வருகைமுன்னிட்டு, அழகியல் கருதி, ஒரு நன்மகனாய், கொஞ்சம்தயக்கத்துடன் சிலந்தி வெளியே சென்றிருந்த பொழுதில் அண்ணாமலை சரத்பாபு போலகூட்டைக்கலைத்தேன். ஒரு மணி நேரத்தில் இன்னும் அழகாய் எழும்பியிருந்தது ஒரு தொங்குதோட்டம்.

எத்தனை முறை வேண்டுமானாலும் கலைத்துக்கொள்..
அற்பனே முடிந்தால் என் கலையைக்கொல்!!
என்று என்னைத் தலை குனியச்செய்தான் அந்த அற்புதக்கலைஞன். அடுத்த நாளே, அறையில் சிலபடங்களை ஒட்டி வைத்தேன். ஒரு படத்தில் மலை, மற்றொன்றில் காடு, மூன்றாவதில் வயல், நான்காவது பாலைவனம். அவற்றின் அடியில், குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, பாலைத்திணை என்று எழுதினேன். சிலந்திக்கூடு இருந்த இடத்தில் நெய்தல் திணை என்றுஎழுதினேன். அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில், மீனுக்குப் பதிலாக ஒரு ஈசல் பூச்சி மாட்டிஇருந்தது.

காதலாகிக் கசிந்துருகிய காலத்தில் கூட,

மற்றுமொரு முறை கலைக்கிறேன் காதல்
மீண்டும் குடியேறுகிறாள்
என் காதல் சிலந்தி

என்று உருவகத்திற்கு உருவினேன் சிலந்தி வலையை.

நான்கு ஆண்டு கல்லூரி வாசம் முடிந்து அறையைக் காலி செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் அன்னாந்துபார்த்த போது, காணாமல் போயிருந்தது சிலந்திக்கூடு.

இன்று கணினிகள் விரித்த வலையில் சிக்கிய பிறகு நேற்று காலை நினைத்துக்கொண்டேன் அந்த ஒற்றடை நாட்களை. இந்நேரம் மற்றுமொரு சிலந்தி ஏதாவது ஒரு அறையில் எவனுக்கேனும் போதி மரம் நெய்து கொண்டிருக்கும். இப்படி உலகெங்கும் நூல் எழுதிக்கொண்டிருக்கும் எல்லாச் சிலந்திக்கும், இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம் ஆகட்டும் !!!

நன்றி: 'எச்சம்-வினை' வார்த்தை விளையாடிய சேஷாத்ரிக்கும், 'நூலாம்படை' பின்ன நூல் கொடுத்த சுரேஷிற்கும்.
படம்:
http://ringoblog.com/wp-content/uploads/2008/08/spider-web-ring.jpg


Monday, January 19, 2009

அடியேன்


"அடிக்கடி கவிதை எழுதுவியோ"

"ஓ!
உன் ஒவ்வொரு அடிக்கும் கூட
சில அடிகள் எழுதுவேன்"

(சில வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை இது)
படம்: http://www.gettyimages.com/

Sunday, December 28, 2008

Prince, curse and the poem

Thought of posting a poem and since I havent written one recently, here is an old one written by me somewhere in 2004 or 2005. This requires some back ground.

One morning when we were still transitioning between college and corporate world, in came a forward which goes as below (I have shortened it):

Handsome prince - cursed by a witch - can speak only one word a year - can save the word every year, so that, for example, after 4 years of silence, can speak 5 words in the fifth year - meets a lovely princess - waits for 2 years to say 'my darling' - in the second year, decides to wait few more - 9th year, walks to her and says '"My darling, I love you! Will you marry me?" - and guess what the damsel said - "Pardon?".

That's a cruel comedy for the romantic minds. Anyway, here is what I wrote on it:

பல திங்கள் மெளனித்து
வார்த்தை வார்த்தையாய் சேமித்த காதலை
ஒரே வார்த்தையில் சிதறடித்தாள் -

"Pardon?"

(I havent used the exact words here...I am not sure what I wrote originally).

Ok...here is a transliteration(**) which I made up just now:

"Months of silence

And pounds of love

Gathered in his heart -

When the words were uttered

She spelled a bitter curse -

"Pardon?"

** Post Script added on (1/4/2009): The usage of 'transliteration' is wrong here. A better word would be 'Translation'.