Tuesday, June 2, 2009

நட்பறிதல்

கல்லூரி சினிமா இசை இலக்கியம்
இடை இடையே மெளனம்..
எல்லாம் பேசிக்கொண்டே உன் வீடு வந்து சேர்ந்தோம்;

பிறகே தெரிந்துகொண்டோம்
உன்னிடம் குடை இருந்ததை நானும்
என்னிடம் குடை இருந்ததை நீயும்

சிரிப்படங்கிப்,
பின்னும் பேசிக் கொண்டிருந்தோம் -
நீ - நான் - மழை

6 comments:

Seshadri T A said...

Kaathal arithal pondru unarvu aerpattathu :-)

kadaisi varigal athanai azhagu! HM.. a flat sixer over the extra covers :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு! கவிதை நடையும், அது சொல்லும் உணர்வும்.

-ப்ரியமுடன்
சேரல்

srikk said...

Reminded me of our walk on scroth lane on one rainy day :)

ny said...

உங்கள் குட்டிக் கவிதைகள் அழகு..
முன்பெப்போதோ எழுதியதெனக் குறிக்கிறீர்கள்..
இப்போதும் தொடருங்களேன்!

bhupesh said...

ஒரு குடையில் இருவரும் வந்திருந்தால் ஒரு வேளை காதல் அறிந்திருக்கலாம்....உலகோடு நனைந்ததில் குடையோடு சேர்ந்து காதலும் விரிக்கப்படாமல் இருந்திருக்குமோ? "##மழை பொது நலம்; குடை சுயநலம்##" - நட்பும் காதலும் போல்.
## - 'நேருக்கு நேர்' திரைப்பட வசனம்.

நன்றி சேரல், சேஷு, Srikk, கார்த்தி

Siva said...

Kavithai!!! Attagasam...

Just recall my college days...


ஒரு குடையில் இருவரும் வந்திருந்தால் ஒரு வேளை காதல் அறிந்திருக்கலாம்....உலகோடு நனைந்ததில் குடையோடு சேர்ந்து காதலும் விரிக்கப்படாமல் இருந்திருக்குமோ?
........

Edhuvoum.. Romba Attagasm...

Adikadi.. Eppdai patiya kelapu..